By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tiruvannamalai NewsTiruvannamalai News
Notification Show More
Latest News
மார்கழி மாத சிறப்பு : அண்ணாமலையாருக்கு வெள்ளிக் கவசம்
ஆன்மீகம்
மார்கழி ஸ்பெஷல் : ஆரணி பூ மார்க்கெட்டில் விற்பனை ஓஹோ!
Uncategorized
அருணாச்சல மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது
ஆன்மீகம் கார்த்திகை தீபம் 2022 சம்பவங்கள் நிகழ்ச்சிகள்
மூன்றாம் நாள் திருவிழா – சிம்ம வாகனம்
கார்த்திகை தீபம் 2022
முடி கொட்டுவதை தவிர்க்கவும், அடர்த்தியான கூந்தல் வளர்வதற்குமான 10 சிறப்பு குறிப்புகள்
அழகுக் குறிப்புகள் ஆரோக்கியம்
Aa
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல்
    • சம்பவங்கள்
    • விளையாட்டு
    • சினிமா
    • சிறப்பு கட்டுரைகள்
  • ஆன்மீகம்
    • தல வரலாறு
    • திருவண்ணாமலை கிரிவலம்
      • கிரிவலம் தேதிகள் 2023
    • மாத ராசி பலன்கள்
  • ஜோதிடம்
  • நிகழ்ச்சிகள்
    • கார்த்திகை தீபம் 2022
  • நகர்புறம்
    • ரியல் எஸ்டேட்
    • வர்த்தகம்
    • வேலைவாய்ப்புகள்
  • தகவல்களம்
    • திருவண்ணாமலை மாவட்டம் : முக்கிய தொலைபேசி எண்கள்
    • அரசு அலுவலகங்கள்
    • கல்வி நிலையங்கள்
    • ஹோட்டல்கள்
  • சுற்றுலா தளங்கள்
  • வீடியோ செய்திகள்
  • எங்களை அணுக
Reading: திருவண்ணாமலை கிரிவலம் செய்ய உகந்த நாட்களும் அதற்கான பலன்களும்
Share
Aa
Tiruvannamalai NewsTiruvannamalai News
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல்
    • சம்பவங்கள்
    • விளையாட்டு
    • சினிமா
    • சிறப்பு கட்டுரைகள்
  • ஆன்மீகம்
    • தல வரலாறு
    • திருவண்ணாமலை கிரிவலம்
    • மாத ராசி பலன்கள்
  • ஜோதிடம்
  • நிகழ்ச்சிகள்
    • கார்த்திகை தீபம் 2022
  • நகர்புறம்
    • ரியல் எஸ்டேட்
    • வர்த்தகம்
    • வேலைவாய்ப்புகள்
  • தகவல்களம்
    • திருவண்ணாமலை மாவட்டம் : முக்கிய தொலைபேசி எண்கள்
    • அரசு அலுவலகங்கள்
    • கல்வி நிலையங்கள்
    • ஹோட்டல்கள்
  • சுற்றுலா தளங்கள்
  • வீடியோ செய்திகள்
  • எங்களை அணுக
Have an existing account? Sign In
Follow US
Tiruvannamalai News > Blog > ஆன்மீகம் > திருவண்ணாமலை கிரிவலம் > திருவண்ணாமலை கிரிவலம் செய்ய உகந்த நாட்களும் அதற்கான பலன்களும்
ஆன்மீகம்தல வரலாறுதிருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் செய்ய உகந்த நாட்களும் அதற்கான பலன்களும்

Admin-TVMalaiNews
Last updated: 2022/12/01 at 11:07 AM
Admin-TVMalaiNews Published August 10, 2022
Share
SHARE

திருவண்ணாமலையைக் கிரிவலம் வரும் முறையில் இலட்சத்து எட்டு வகைகள் உண்டு என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு கிரிவல முறைக்கும் ஒவ்வொரு விதமான தெய்வீகப் பலன்கள் உண்டு. கிரிவலம் செய்கின்ற நாள், நட்சத்திரம் ஆகியவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபாடடையும். முன்பெல்லாம் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே கிரிவலம் நடைபெற்றது. இப்பொழுது மாதத்தின் எல்லா நாட்களிலும் கிரிவலம் நடைபெறுகிறது.

கோயிலின் உள்ளே தெற்கு கோபுர வாயிலருகே உள்ள பிரம்ம லிங்கத்தில் தொடங்கி தெற்கு வாசல் வழியே வெளிவந்து கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பல்வேறு லிங்கங்கள், தீர்த்தங்கள். நந்திகள் ஆகியவைகளை தரிசித்தவாறே இரட்டைப் பிள்ளையார் கோயிலுக்கு அருகே அமைந்துள்ள பூதநாராயணர் சந்நிதியில் யாத்திரையை முடிப்பதுதான் முழுமையான கிரிவலம் என்று கூறப்படுகின்றது.

கிரிவலம் வந்த பின்னர், அண்ணாமலையார் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் கன்னி மூலையில் எழுந்தருளியுள்ள துர்வாச முனிவரை வணங்கி பின்னர் அண்ணாமலையாரையும் உண்ணாமுலையம்மையாரையும் தரிசித்தல் வேண்டும்.

திருவண்ணாமலை கிரிவலத்தின் தனி சிறப்பு என்னவென்றால் இங்கு வருடத்தின் எல்லா நாட்களிலும் பகலோ இரவோ அந்தியோ சந்தியோ வெயிலோ மழையோ எந்த நேரமும் யாராவது ஒருவர் கிரிவலம் வந்தவாறு இருப்பார்கள்.

கந்தர்வர்கள், தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள், வேற்றுலகவாசிகள் ஆகியோர் இந்த மலையைப் பூலோக நியதிகளுக்கு ஏற்றவாறு மானுட வடிவிலோ அல்லது ஊர்வனவாகவோ, பறப்பனவாகவோ நடப்பனவாகவோ வடிவம் எடுத்தாவது அல்லது அரூப வடிவமாகவோ கிரிவலம் செய்தவண்ணம் இருப்பார்கள்.

இதில் ஆச்சர்யப்படத்தக்க செய்தி என்னவென்றால் நாம் இம்மலையை கிரிவலம் செய்யுங்காலங்களில் இவர்கள் அபூர்வமாக நம் கண்ணிலும் தென்படுவார்களாம். அவர்களை இனங்காணும் கொடுப்பினை இருந்தால் நமக்கு அவர்களின் அருளாசியும் கிடைக்குமாம்.

ஞாயிறு கிரிவலம்

திருவண்ணாமலையில் ஞாயிறு கிரிவலம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் சூரிய பகவான் பூவுலகிற்கு ஏதேனும் ஒரு வடிவில் வந்து திருவண்ணாமலையை கிரிவலம் செய்வஹ்தாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இன்றும் திருவண்ணாமலையில் மலையை சூரியன் குறுக்காகக் கடக்காமல் வலம் வந்து செல்வதை நம்மால் பார்க்க முடியும். இப்படி சூரியன் மலையை வலம் வருவது உலகில் வேறு எங்கும் காணமுடியாத அற்புதக் காட்சி.

இந்த ஞாயிறு கிரிவலம் செய்பவர்கள் சிவலோகமாம் திருக்கயிலாயத்தில் தேவர்களாய் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்களாம். ஞாயிறு கிரிவலம் செய்தால் குடும்பப் பிரச்சினை காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதியர் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ வழி பிறக்கும்.

திங்கள் கிரிவலம்

திங்கட்கிழமை கிரிவலம் செய்யும் மானுடர்கள் ஏழுலகத்தையும் ஆண்டு சிவசாரூபத்தை அடைவர் என்று சொல்லப்படுகிறது. திங்கட்கிழமை கிரிவலத்தால் திருமணத்தடை அகலும் என்று நம்பப்படுகிறது. திங்கள் பௌர்ணமியில் திருவண்ணாமலையை வலம் வந்துதான் பிரம்மா சரஸ்வதி தேவியை மணந்து கொண்டாராம். அதனால் அன்றைய தினம் கிரிவலம் செய்யின் எத்தகைய திருமணத் தடையும் அகன்று விடும் திங்கட்கிழமை காலை 5.30 மணி முதல் 7.30 மணிக்குள்ளாக, அதாவது இராகு காலத்திற்கு முன் கிரிவலம் துவங்கி இடையில் ஏதேனும் ஓர் அம்மன் சந்நிதியில் ஏழைக் கன்னிப் பெண்களுக்கு பூச்சரம், மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, வளையல், வஸ்திரம் முதலான மங்கலப் பொருட்களைத் தாம்பூலத்துடன் தானமாகக் கொடுக்கத் திருமணத் தடை எளிதில் அகலும்.

திங்களும் பௌர்ணமியும் சேரும் தினத்தன்று நீதித்துறையில் இருப்பவர்க கிரிவலம் வந்தால் அவர்கட்கு வாக்கு வன்மையும் வழக்கு வெற்றியும் ஏற்படுமாம். தொடர்ந்து நீதிமன்ற படிகட்டுகலி மிதித்து அல்லலுறும் அன்பர்களுக்கும் நெடுநாளாய்த் தீர்வு காணப்படாமல் இருக்கும் வழக்குகள் நல்ல முறையில் தீர்வு ஏற்படுமாம்.

செவ்வாய் கிரிவலம்

செவ்வாய்க்கிழமை கிரிவலம் செய்வோமானால் கடன் தொல்லையும் வறுமை நிலையும் நீங்கி வளமான வாழ்வைப் பெறலாம். விசாக நட்சத்திரம் கூடிய செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அண்ணாமலையைக் கிரிவலம் வந்தால் அண்ணாமலையார் தரிசனம் நிச்சயம் என்று கூறபப்டுகிறது.

செவ்வாய்க் கிரிவலத்தால் உத்தியோகம் நிமித்தமாய் ஏற்படும் பொறாமை, கலகம், அவமானம், பகையுணர்ச்சி ஆகியவைகள் நீங்கி உத்தியோக உயர்வு, இடமாற்றம், துன்பங்களிலிருந்து விடுதலை ஆகியவைகளைப் பெறுவார்களாம்.

புதன் கிரிவலம்

புதன் கிழமையன்று கிரிவலம் செய்பவர்க்கு ஶ்ரீ பூதநாராயணப் பெருமாளே ஏதேனும் ஒரு வடிவில் துணை வந்து கிரிவலம் முழுவதும் வழிகாட்டி செல்வாராம். புதன் கிரிவலத்தால் கலைகளெல்லாம் கசடற கற்கும் திறன் பெறுவார்கள்.

நியாயமான உத்தியோக உயர்வும், தொழில் திறமையும் ஏற்படும். வாராக் கடனும் வசூலாகும். பெண்களுக்குத் தீர்க்க சுமங்களித்துவமும் சந்தான பாக்கியமும் இந்த புதன் கிரிவலத்தால் கிட்டும் என்று கூறப்படுகிறது.

வியாழன் கிரிவலம்

வியாழக்கிழமை குரு தட்சிணாமூர்த்திக்கு உகந்த நாள். அன்றைய தின கிரிவலத்தின் போது தட்சிணாமூர்த்தி சுவாமிகள் யாரேனும் ஒரு குருவின் வடிவிலே வெளிப்பட்டு காட்சித் தருவாராம். இந்த குரு தரிசனமானது மயான பூமிகளைக் கண்டால் ஏற்படும் பயத்தைப் போக்குமாம். இறந்தவர்களுக்கான இறுதி மரியாதையை செலுத்த தவறியவர்களுக்குப் பிராயசித்த கிரிவலம் இதுவேயாகும்.

வியாழன் கிரிவலத்தால் சகலவிதத் திருமணத் தோஷங்களும் நீங்குவதுடன், அவர்கள் அடுத்த பிறவியில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் குருவாக விளங்கும் சிறப்பைப் பெறுவார்களாம்.

வெள்ளி கிரிவலம்

ஒரு காலத்தில் அசுரர்கள் தங்களுக்கு அளப்பரிய செல்வங்களை வழங்க வேண்டும் என்று திருமகளை வற்புறுத்தினார்களாம். ஆனால், திருமகளே அவர்களின் பேராசைக்கு இணங்காமல் அவர்களிடமிருந்து தப்பித்து திருவண்ணாமலைக்கு வந்து தைல எண்ணையில் தீபமாக உறைந்து தீபமாக கிரிவலம் வந்த நாள் வெள்ளிக் கிழமை. அதனால் வெள்ளிக் கிழமை கிரிவலம் வந்தால் இல்லறத்தில் இருக்கும் பெண்களுக்கு லட்சுமி கடாட்சமும், இல்லற இன்பமும், அமைதியும் மாங்கல்ய பலமும் நிச்சயமாகக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

எதிரிகளால் ஏற்படுகின்ற பில்லி, சூனியம், ஏவல், முதலான துன்பங்களை அகற்றி மனக்கோளாறுகளை நீக்கவல்லது இந்த வெள்ளிக் கிரிவலம்.

சனி கிரிவலம்

சனிக்கிழமை கிரிவலம் செய்பவர்களுக்கு நவக்கோள்களும் பதினொன்றாம் இடத்தில் இருந்து கொண்டு அதற்கான சிறப்புப் பலன்களைக் கொடுப்பார்கள்.

இந்த சனி கிரிவலம் கண், காது, சுவாச வியாதிகள் ஆகியவற்றால் அவதிப்படுவோர்க்கு சிறந்த நிவாரணத்தை அளிக்க வல்லது. நரம்பு வியாதிகள், பக்கவாத நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் இந்த கிரிவலத்தால் பயன் பெறலாம். இன்றைய தினம் கிரிவலப் பாதையில் எமலிங்க தரிசனம் செய்வதால் தீராத நோய்களும் தீர்ந்து மரண பயம் நீங்குமாம்.

இவை மட்டுமன்றி சிவராத்திரியிலும் வருடப்பிறப்பன்றும், ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களிலும் இந்த திரு அண்ணாமலையை வலம் வருபவர்கள் மேலே கூறப்பட்ட நன்மைகளை விட மிக அதிகமான பலன்களை அடைவார்களாம்.

நாள்தோறும் கிரிவலம் வருபவர்க்குக் கிடைக்கும் நன்மைகளை இங்கு பட்டியலிட முடியாத அளவுக்கு எண்ணிலடங்காதது என்று அருணாசலப் புராணம் கூறுகிறது.

You Might Also Like

மார்கழி மாத சிறப்பு : அண்ணாமலையாருக்கு வெள்ளிக் கவசம்

அருணாச்சல மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

மூன்றாம் நாள் திருவிழா – சிம்ம வாகனம்

திரு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பூஜைகள் மற்றும் தரிசன நேர விபரங்கள்

Admin-TVMalaiNews August 10, 2022
Share this Article
Facebook Twitter Email Print
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US

Find US on Social Medias
Facebook Like
Twitter Follow
Youtube Subscribe
Telegram Follow

Subscribe to TVMalaiNews

Sign up to our Newsletter receive TVMALAINEWS in your Inbox

We don’t spam! Read our [link]privacy policy[/link] for more info.

Check your inbox or spam folder to confirm your subscription.

Popular News
ஆன்மீகம்கார்த்திகை தீபம் 2022சம்பவங்கள்

டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம்

Admin-TVMalaiNews Admin-TVMalaiNews November 26, 2022
கார்த்திகை தீபம் 2022 சிறப்பு ஏற்பாடுகள்
அருணாச்சல மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது
கார்த்திகை தீபம் 2022 – நிகழ்ச்சி நிரல்
திருவண்ணாமலை மாவட்டம் : முக்கிய தொலைபேசி எண்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics

About US

TVMalaiNews.com is a News and Media company providing up to date news from in and around the town of Tiruvannamalai.

Subscribe to TVMalaiNews

Sign up to our Newsletter receive TVMALAINEWS in your Inbox

We don’t spam! Read our [link]privacy policy[/link] for more info.

Check your inbox or spam folder to confirm your subscription.

Follow US

© 2022 Thiruvannamalai News by Mahizhan Associates. All Rights Reserved.

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?