By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tiruvannamalai NewsTiruvannamalai News
Notification Show More
Latest News
மார்கழி மாத சிறப்பு : அண்ணாமலையாருக்கு வெள்ளிக் கவசம்
ஆன்மீகம்
மார்கழி ஸ்பெஷல் : ஆரணி பூ மார்க்கெட்டில் விற்பனை ஓஹோ!
Uncategorized
அருணாச்சல மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது
ஆன்மீகம் கார்த்திகை தீபம் 2022 சம்பவங்கள் நிகழ்ச்சிகள்
மூன்றாம் நாள் திருவிழா – சிம்ம வாகனம்
கார்த்திகை தீபம் 2022
முடி கொட்டுவதை தவிர்க்கவும், அடர்த்தியான கூந்தல் வளர்வதற்குமான 10 சிறப்பு குறிப்புகள்
அழகுக் குறிப்புகள் ஆரோக்கியம்
Aa
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல்
    • சம்பவங்கள்
    • விளையாட்டு
    • சினிமா
    • சிறப்பு கட்டுரைகள்
  • ஆன்மீகம்
    • தல வரலாறு
    • திருவண்ணாமலை கிரிவலம்
      • கிரிவலம் தேதிகள் 2023
    • மாத ராசி பலன்கள்
  • ஜோதிடம்
  • நிகழ்ச்சிகள்
    • கார்த்திகை தீபம் 2022
  • நகர்புறம்
    • ரியல் எஸ்டேட்
    • வர்த்தகம்
    • வேலைவாய்ப்புகள்
  • தகவல்களம்
    • திருவண்ணாமலை மாவட்டம் : முக்கிய தொலைபேசி எண்கள்
    • அரசு அலுவலகங்கள்
    • கல்வி நிலையங்கள்
    • ஹோட்டல்கள்
  • சுற்றுலா தளங்கள்
  • வீடியோ செய்திகள்
  • எங்களை அணுக
Reading: திருஅருணாச்சல மலையின் சிறப்பம்சம் என்ன?
Share
Aa
Tiruvannamalai NewsTiruvannamalai News
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல்
    • சம்பவங்கள்
    • விளையாட்டு
    • சினிமா
    • சிறப்பு கட்டுரைகள்
  • ஆன்மீகம்
    • தல வரலாறு
    • திருவண்ணாமலை கிரிவலம்
    • மாத ராசி பலன்கள்
  • ஜோதிடம்
  • நிகழ்ச்சிகள்
    • கார்த்திகை தீபம் 2022
  • நகர்புறம்
    • ரியல் எஸ்டேட்
    • வர்த்தகம்
    • வேலைவாய்ப்புகள்
  • தகவல்களம்
    • திருவண்ணாமலை மாவட்டம் : முக்கிய தொலைபேசி எண்கள்
    • அரசு அலுவலகங்கள்
    • கல்வி நிலையங்கள்
    • ஹோட்டல்கள்
  • சுற்றுலா தளங்கள்
  • வீடியோ செய்திகள்
  • எங்களை அணுக
Have an existing account? Sign In
Follow US
Tiruvannamalai News > Blog > ஆன்மீகம் > திருஅருணாச்சல மலையின் சிறப்பம்சம் என்ன?
ஆன்மீகம்தல வரலாறு

திருஅருணாச்சல மலையின் சிறப்பம்சம் என்ன?

Admin-TVMalaiNews
Last updated: 2022/11/26 at 3:01 PM
Admin-TVMalaiNews Published November 26, 2022
Share
SHARE

இறைவன் அக்கினிப் பிழம்பாய், அழல் வடிவாய் திருவண்ணாமலையில் அமர்ந்தாலும் அதன் அடிவாரத்தில் அமர்ந்த லிங்கத் திருவுருவிற்கே திருமாலும், பிரமனும் பூசை செய்தனர். ஆனால், இறைவனே அக்கினை மலையாய் அமர்ந்துள்ளதை அறிந்த சித்தர்களும், தேவர்களும் அவரைத் தரிசிக்க அண்ணாமலைக்கு வந்தனர். இறைவன் அழல் வடிவாய் இருப்பதனால் சாதாரணக் கண்களால் அவரை தரிசிக்க இயலாது வருந்தினர். அதனால், “இறைவா! திருவண்ணாமலையில் தங்களின் அழற்பிழம்பு வடிவத்தைச் சாதாரண ஜீவனும் காணுகின்ற வடிவத்தில் காட்சியளிக்க வேண்டும்” என்று வேண்டிக் கடுமையாக தவம் இயற்றினர்.

இறைவனும் அவர்களது கோரிக்கைக்கு இரங்கி அவர்கள் முன் தோன்றி சித்தர்கலே கலங்காதீர். யாம் கிருத, திரேதா, துவாபர, கலியுகங்களில் ஒவ்வொரு யுகத்திலும் அந்தந்த யுக நியதிகளுக்கேற்ப ஒவ்வொரு வடிவமாக திருவண்ணாமலையில் காட்சியளிப்பேன் என்று கூறினார்.

அவரது சொல்படியே திருவண்ணாமலை கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் காட்சியளிக்கிறது. பஞ்சபூதத் தலங்களில் முதலில் தோன்றியது அக்கினித் தலமான திருவண்ணாமலையே. அதன்பிறகே, காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் (நிலம்), திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்(நீர்), காளஹஸ்தி திருக்காளத்தீஸ்வரர் (வாயு), சிதம்பரத்தில் அம்பலவர் (ஆகாயம்) என ஆலயத் தோற்றம் கண்டது. ஏனைய திருக்கோயில்கள் தேவர்கள் வழிபாட்டிற்கும் இந்த திருவண்ணாமலை சித்தர்கள் வழிபாட்டிற்கும் உரியதாயிருப்பதற்குச் சில சிறப்பான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இமய மலையிலுள்ள கயிலங்கிரி இறைவன் வாழும் மலை என்றாலும், இறைவனே மலை வடிவில் இங்கு எழுந்தருளியிருப்பது தனிச் சிறப்பு. ஆலயங்களை வலம் வருவதை விட ஆண்டவனை வலம் வருவது மிகுந்த பேறு அல்லவா? அகிலத்தையும் வலம் வந்த சிறப்பை விட ஆண்டவரை வலம் வந்த சிறப்பு அற்புதமானது என ஆறுமுகனுக்கு உணர்த்திய அண்ணலல்லவா மலை வடிவமாக இங்கு அமர்ந்திருக்கிறார்.

திருவண்ணாமலையில் சிவ பெருமான மலை வடிவில் காட்சியளிப்பதால் ஆலயத்தை சுற்றி வருவதை விட மலையை சுற்றி வலம் வருவதுதான் மிகச் சிறந்த வழிபாடாக கருதப்படுகிறது.

இறைவனாகிய திருவண்ணாமலையை ஒரு முறை சுற்றி வந்தால் ஒரு கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது சித்தர்கள் திருவாக்கு.

கயிலாயமும், மேரு மலையும், இறைவன் உறையும் இடங்களாகும். ஆனால், திருவண்ணாமலையோ இறைவனது திருவடிவமாகும். அதனால் ஏனைய மலைகளை வலம் வருவதிலும் திருவண்ணாமலையை வலம் வருவது இறைவனை வலம் வருவதற்கு ஒப்பாகும்.

மனிதர்களும் மிருகங்களும் முக்திப் பேற்றை எளிதாக அடையும் பொருட்டே இறைவன் இம்மலையுருக் கொண்டுள்ளார்.

அத்தகைய மகத்தான மலையின் சிறப்புகளை சிறிதளவு வார்த்தைகளால் மட்டும் சொல்வது அடங்காது.

You Might Also Like

மார்கழி மாத சிறப்பு : அண்ணாமலையாருக்கு வெள்ளிக் கவசம்

அருணாச்சல மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

மூன்றாம் நாள் திருவிழா – சிம்ம வாகனம்

திரு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பூஜைகள் மற்றும் தரிசன நேர விபரங்கள்

Admin-TVMalaiNews November 26, 2022
Share this Article
Facebook Twitter Email Print
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US

Find US on Social Medias
Facebook Like
Twitter Follow
Youtube Subscribe
Telegram Follow

Subscribe to TVMalaiNews

Sign up to our Newsletter receive TVMALAINEWS in your Inbox

We don’t spam! Read our [link]privacy policy[/link] for more info.

Check your inbox or spam folder to confirm your subscription.

Popular News
ஆரோக்கியம்

வேப்பம்பூ கொண்டு இந்த பிரச்சினையெல்லாம் சரி பண்ணலாம்…

Admin-TVMalaiNews Admin-TVMalaiNews November 26, 2022
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் : குறிப்புகள்
மார்கழி ஸ்பெஷல் : ஆரணி பூ மார்க்கெட்டில் விற்பனை ஓஹோ!
திருவண்ணாமலை கிரிவல மகிமை
திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள 7 புகழ்பெற்ற திருக்கோயில்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics

About US

TVMalaiNews.com is a News and Media company providing up to date news from in and around the town of Tiruvannamalai.

Subscribe to TVMalaiNews

Sign up to our Newsletter receive TVMALAINEWS in your Inbox

We don’t spam! Read our [link]privacy policy[/link] for more info.

Check your inbox or spam folder to confirm your subscription.

Follow US

© 2022 Thiruvannamalai News by Mahizhan Associates. All Rights Reserved.

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?